குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள்
மழலைச் சொல்
கேளாதவர்.
குழந்தைகள் தம் மழலை சொல்லால் நம்மை ம்கிழ்விக்கும் பொழுது
அதற்கு நிகரான இன்பம் வேறில்லை எனலாம்.
என்னுடைய பேரன் இதற்கு விதி
விலக்கல்ல. இரண்டு வயதிலேயே நன்கு பேசத்துவங்கிவிட்டான். பிற்காலத்தில் சிறந்த
பேச்சாளராக வருவனோ அல்லது பேசி மற்றவர்களைத் தூக்கத்தில் ஆழ்த்துவானோ
தெரியாது. இப்போது எல்லோரையும்
மகிழ்ச்சியில் ஆழ்த்திக்
கொண்டிருக்கிறான்.
இதோ சில கிள்ளை மொழி.
புத்தகங்களைப் பெரிய
மனிதன் போல் வாசித்துக் கொண்டிருந்தவன் திடீரென்று , "அம்மா நீ (நான்) யொம்ப
சந்தோஷமாயிக்கேன்"
என்பான்.
ஒரு நாள் சமயலறையில் தொடவேண்டாம் என்ற
சாமானத்தை தொட்டுவிட்டு எல்லோரும் ஏகக்குரலில் எடுக்க வேண்டாம் என்று
கத்திய
பொழுது சிரித்துக் கொண்டே " நீ யொம்ப குறும்பு பண்றேன்" என்று
கூறினான்.
காரில் எல்லோரும் சென்று கொண்டிருந்தோம். அப்போது நடந்த
உரையாடல்.
" 'தாத்தா கார் எங்கே?'
'தாத்தா கார் ஆக்சிடெண்ட்
ஆயிடுத்து'
'எப்டி தாத்தா கார் அக்சிடெண்ட் ஆயிடுத்து?'
'டாக்சி ஃபாஸ்டா
வந்து இடிச்சுட்டான்'
அடுத்து அவன் கூறியது அனைவரையும் வியப்பில்
ஆழ்த்தியது.
'ஃபாஸ்டா போனா போலீஸ்காரன் புடிசிண்டு
போயிடுவான்'
ரதி, ராஜேஷ், ரிஷப் மூவரும் வெளியில் செல்லக்
கிளம்பினார்கள். திடீரென்று ரிஷப் உள்ளே ஓடி வந்து விட்டான்.
ரதி உள்ளே திரும்பி
வந்து அவனை ஏன் உள்ளே வந்தாய் என்று கேட்க அவனோ 'அதான் ஒரு சிரிப்பு ' என்று கூறி
எல்லோரையும்
சிரிக்க வைத்தான்.
தாத்தாவுக்கும் பேரனுக்கும் ஒரு
விளையாட்டு.
தாத்தா:
க்ரீன் லைட் வந்தா..
பேரன்: போகணும்
தாத்தா: ரெட்
லைட் வந்தா..
பேரன்: ஸ்டாப்
மறுபடிதாத்தா:
க்ரீன் லைட்
வந்தா..
பேரன் குறும்பு சிரிப்புடன்: ஸ்டாப்
தாத்தா: ரெட் லைட்
வந்தா..
பேரன்: போகணும்
திரும்ப அதே கேள்வி , அதே பதில்
பின்னர் தாத்தா:
க்ரீன் வந்தா ஸ்டாப், ரெட் வந்தா கோ
பேரன்: க்ரீன் வ்ந்தா கோ , ரெட் வந்தா
ஸ்டாப்.
ஜோ என்பவர் என் வீட்டுக் க்ளீனர்.
ரதி "வரியா ரிஷப் ஜோ
குளிக்கலாம் " என்றால் 'ஜோ எங்கம்மா?' என்று பேரன் கேட்பான்.
இப்படியாகத்
தினமும் ஏதாவது கூறி எங்களை மகிழ்வித்த வண்ணம் இருக்கிறான் ரிஷப்.
இதையெல்லாம்
நேரிடையக அவன் சொல்வதைக் கேட்க மிகவும் ரசமாயிருக்கும்.
Friday, 21 October 2011
Friday, 14 October 2011
பற்றி நின்றால் பற்றகற்றும்
ஆக்க ஒரு கடவுள் உண்டு; அதுவே ப்ரும்மா;
அழிக்க ஒரு கடவுள் உண்டு; அதுவே சிவமாகும்;
காக்க ஒரு கடவுள் உண்டு; விஷ்ணு எனும் நாமம்;
கல்வியுமளிக்க கலை தேவியாம் சரஸ்வதி;
செல்வமுமளிக்க செந்தாமரையில் லட்சுமி;
அனைத்தையும் காக்கும் அருள் பொழியும் அம்பிகை;
மழை வேண்டி மாரியம்மன்;
குலம் சிறக்கக் காளியம்மன்;
மனமிரங்க துர்கையம்மன்;
ஆக எதற்குமொரு பற்றுண்டு;
பற்றி நின்றால் வெற்றியுண்டு;
வெற்றி கண்டால் கலக்கமில்லை;
கலங்கி நின்றால் இரக்கமில்லை;
இரங்கி நின்றால் ஏற்றமில்லை;
ஏற்றமிருப்பின் தெளிவு இல்லை;
தெளிவு கண்டால் பற்றில்லை;
பற்று இன்றேல் ஞானமுண்டு;
ஞானம் கண்டால் உயர்வு உண்டு;
இதுவே வாழ்வின் பல நிலைகள்.
அழிக்க ஒரு கடவுள் உண்டு; அதுவே சிவமாகும்;
காக்க ஒரு கடவுள் உண்டு; விஷ்ணு எனும் நாமம்;
கல்வியுமளிக்க கலை தேவியாம் சரஸ்வதி;
செல்வமுமளிக்க செந்தாமரையில் லட்சுமி;
அனைத்தையும் காக்கும் அருள் பொழியும் அம்பிகை;
மழை வேண்டி மாரியம்மன்;
குலம் சிறக்கக் காளியம்மன்;
மனமிரங்க துர்கையம்மன்;
ஆக எதற்குமொரு பற்றுண்டு;
பற்றி நின்றால் வெற்றியுண்டு;
வெற்றி கண்டால் கலக்கமில்லை;
கலங்கி நின்றால் இரக்கமில்லை;
இரங்கி நின்றால் ஏற்றமில்லை;
ஏற்றமிருப்பின் தெளிவு இல்லை;
தெளிவு கண்டால் பற்றில்லை;
பற்று இன்றேல் ஞானமுண்டு;
ஞானம் கண்டால் உயர்வு உண்டு;
இதுவே வாழ்வின் பல நிலைகள்.
Sunday, 28 August 2011
மதம்
எம்மதமும் சம்மதம் என்று
செப்பினான் அன்றோர் புலவன்;
ஆயின் இன்று கண்டதோ
மதத்தால் பிரிவினை
எனும் பெரும்பிளவு;
கடவுளின் சன்னிதானத்தில்
எல்லோரும் சமம் என்று
இயம்பினார் ஒரு பிரிவினர்;
ஆயின் இவ்வுலகு கண்டதோ
எடுக்கிறோம் புகைப்படம்;
அவர்க்கிருக்கும் அறிவினைக்
கொடுப்பாயா எமக்கும்
எந்தன் இறைவனே!
செப்பினான் அன்றோர் புலவன்;
ஆயின் இன்று கண்டதோ
மதத்தால் பிரிவினை
எனும் பெரும்பிளவு;
கடவுளின் சன்னிதானத்தில்
எல்லோரும் சமம் என்று
இயம்பினார் ஒரு பிரிவினர்;
ஆயின் இவ்வுலகு கண்டதோ
ஹிம்சை எனும் அரக்கன்;
புலியும் பூனையும் ஒருங்கிணைந்துஎடுக்கிறோம் புகைப்படம்;
அவர்க்கிருக்கும் அறிவினைக்
கொடுப்பாயா எமக்கும்
எந்தன் இறைவனே!
Thursday, 7 April 2011
மடல் பதின்மூன்று
என் எண்ணமெல்லாம் வடித்தெடுத்து
கவிதையாக மாலை சூட்டி
கடற்கரையில் சிலைவடித்து
கற்பனையில் கரமிணைத்து
காலமெலாம் நண்பர்களாய்
கனவினிலே கலை படித்து
கருத்தொருமித்த வேளையில்தான் நீயொரு
பல்கலைக் கழகமென்றுணர்த்தியதால்
கண்ணிரண்டும் நீர் நிறைந்து
இதயத்தில் மெருகூட்டியதே!
-ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல் அவசியம்
கவிதையாக மாலை சூட்டி
கடற்கரையில் சிலைவடித்து
கற்பனையில் கரமிணைத்து
காலமெலாம் நண்பர்களாய்
கனவினிலே கலை படித்து
கருத்தொருமித்த வேளையில்தான் நீயொரு
பல்கலைக் கழகமென்றுணர்த்தியதால்
கண்ணிரண்டும் நீர் நிறைந்து
இதயத்தில் மெருகூட்டியதே!
-ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல் அவசியம்
Wednesday, 30 March 2011
விமரிசனம்
விமரிசனம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி ஒரு சிந்தனை.
சமீபத்தில் இன்னிசைக் கச்சேரி ஒன்றிற்குச் சென்றிருந்தேன். பாடகற்கு நல்ல இனிமையான குரல். "சலமு" வர்ணத்தில் ஆரம்பித்துப் பின்னர் "கௌள" ராகம்(ஸ்ரீ மஹா கணபதி ரவதுமாம்) பாடி சுரமும் பாடினார். முக்கியமான ராகமாக லதாங்கி பாடினார். அடுத்து ராகம் தானம் பல்லவி. மிக நீண்ட கடினமான ஒரு தானம் பல்லவி. முடிக்க மிக நீண்ட நேரம். நடுவில் சின்னச் சின்ன பாடல்கள் வேறு இல்லை. நடுநடுவே சிறு சிறு தவறுகள் இருந்தாலும் பாடகர் மிக நன்றாகவே பாடினார். இருந்தாலும் கச்சேரி மிக மிக நன்றாக இருந்தது என்று சொல்ல முடியாத நிலை.
பாடகரிடம் இதையெல்லாம் மனதில் நினைத்துக் கொண்டே "கச்சேரி நன்றாக இருந்தது ஆனால்" என்றி கூறிய நேரம் அவர் கவனத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார். இதனால் தயங்கிய நான் விமரிசனம் செய்வது எப்படி என்ற சிந்தனையில் ஆழ்ந்தேன்.
மேலை நாடுகளில் ஒரு வழக்கம்.சிறு வயதிலிருந்து குழந்தைகளின் தவறுகளைச் சுட்டிக் காட்டாமல் அவர்களின் முயற்சியைப் பாராட்டி அவர்களை உற்சாகப் படுத்த வேண்டும் என்பது அவர்கள் கொள்கை. ஒரு வழியில் பார்த்தால் குழந்தைகள் மனச்சோர்வடையாமல் தங்களை வெளிப்படுத்த முடிகிறது. ஆனால் இம்முறையினால் குழந்தைகட்கு மிகவும் தன்னம்பிக்கை அதிகமாகி தவறுகளை ஒத்துக் கொண்டு அதனை திருத்திச் செம்மையுற முடியாமல் போகிறது.
இதனால் தவறுகளைச் சுட்டிக் காட்டும் பொழுது அதை உணர்ந்து திருத்திக் கொள்ளும் மனப்பான்மையை வளர்க்க வேண்டியது அவசியமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இதையெல்லாம் சொல்கிறேனே ஒழிய அந்த மனப்பக்குவம் எனக்கும் இருக்கிறதா என்பது சந்தேகம்தான். சில நாட்களில் சமையலில் உப்போ புளியோ கூடியதை மற்றவர்கள் சொல்லும் பொழுது ஒப்புக்கொள்ள மனம் வருவதில்லைதான்! அதுவும் ஒரு விமரிசனம் தானே!
ஆனால் "கன்சற்றக்டிவ் க்ரிடிசிசம்" என்பது ஒன்று. ஒருவர் ஒன்றை மிக நன்றாகச் செய்கிறார் என்று உணர்ந்து, அதிலிருக்கக் கூடிய சிறு தவறை நிவர்த்தி செய்வதன் மூலம் அச்செயல் மேம்படும் என்று நினைத்துச் சுட்டிக் காட்டினால் அவ்விமரிசனத்தை செவிமடுப்பது நன்றுறே நினைக்கிறேன்
சமீபத்தில் இன்னிசைக் கச்சேரி ஒன்றிற்குச் சென்றிருந்தேன். பாடகற்கு நல்ல இனிமையான குரல். "சலமு" வர்ணத்தில் ஆரம்பித்துப் பின்னர் "கௌள" ராகம்(ஸ்ரீ மஹா கணபதி ரவதுமாம்) பாடி சுரமும் பாடினார். முக்கியமான ராகமாக லதாங்கி பாடினார். அடுத்து ராகம் தானம் பல்லவி. மிக நீண்ட கடினமான ஒரு தானம் பல்லவி. முடிக்க மிக நீண்ட நேரம். நடுவில் சின்னச் சின்ன பாடல்கள் வேறு இல்லை. நடுநடுவே சிறு சிறு தவறுகள் இருந்தாலும் பாடகர் மிக நன்றாகவே பாடினார். இருந்தாலும் கச்சேரி மிக மிக நன்றாக இருந்தது என்று சொல்ல முடியாத நிலை.
பாடகரிடம் இதையெல்லாம் மனதில் நினைத்துக் கொண்டே "கச்சேரி நன்றாக இருந்தது ஆனால்" என்றி கூறிய நேரம் அவர் கவனத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார். இதனால் தயங்கிய நான் விமரிசனம் செய்வது எப்படி என்ற சிந்தனையில் ஆழ்ந்தேன்.
மேலை நாடுகளில் ஒரு வழக்கம்.சிறு வயதிலிருந்து குழந்தைகளின் தவறுகளைச் சுட்டிக் காட்டாமல் அவர்களின் முயற்சியைப் பாராட்டி அவர்களை உற்சாகப் படுத்த வேண்டும் என்பது அவர்கள் கொள்கை. ஒரு வழியில் பார்த்தால் குழந்தைகள் மனச்சோர்வடையாமல் தங்களை வெளிப்படுத்த முடிகிறது. ஆனால் இம்முறையினால் குழந்தைகட்கு மிகவும் தன்னம்பிக்கை அதிகமாகி தவறுகளை ஒத்துக் கொண்டு அதனை திருத்திச் செம்மையுற முடியாமல் போகிறது.
இதனால் தவறுகளைச் சுட்டிக் காட்டும் பொழுது அதை உணர்ந்து திருத்திக் கொள்ளும் மனப்பான்மையை வளர்க்க வேண்டியது அவசியமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இதையெல்லாம் சொல்கிறேனே ஒழிய அந்த மனப்பக்குவம் எனக்கும் இருக்கிறதா என்பது சந்தேகம்தான். சில நாட்களில் சமையலில் உப்போ புளியோ கூடியதை மற்றவர்கள் சொல்லும் பொழுது ஒப்புக்கொள்ள மனம் வருவதில்லைதான்! அதுவும் ஒரு விமரிசனம் தானே!
ஆனால் "கன்சற்றக்டிவ் க்ரிடிசிசம்" என்பது ஒன்று. ஒருவர் ஒன்றை மிக நன்றாகச் செய்கிறார் என்று உணர்ந்து, அதிலிருக்கக் கூடிய சிறு தவறை நிவர்த்தி செய்வதன் மூலம் அச்செயல் மேம்படும் என்று நினைத்துச் சுட்டிக் காட்டினால் அவ்விமரிசனத்தை செவிமடுப்பது நன்றுறே நினைக்கிறேன்
Wednesday, 23 March 2011
இதழ் பதினொன்று
வட்டமான தட்டு
வானத்திலே மிதந்து
வண்ண ஒளி தன்னை
வாரி வழங்கும் தட்டு
பூமியென்னும் கோளருகே
சுழன்று வரும் தட்டு
சூரியனின் ஒளி பெற்றே
நமக்குதவும் தட்டு
நல்ல நல்ல தட்டு அது
வண்ண நிலா தட்டு.
-பாப்பா பாட்டோ!
விரிந்த மலர் பன்னிரண்டு
தேவீ! பரசக்தி! மீனாட்சி! உமையவளே!
குவளைக் கண் திறந்தென்னைப் பார்த்திட்டால்
கவலையெல்லாம் தீர்ந்து நான் களித்திருக்க மாட்டேனோ!
கருணை மிகு காமாட்சி உன்
அருள் சுரக்கும் பார்வை பட்டால்
அருவியெனப் பொழியுமென் அழுகையுந்தான் தீராதோ!
கோலமிகு குமரியம்மன், தாயே!
நீ குளிர்கண்ணால் நோக்கியென்னை ஏறெடுத்தால்
ஏங்கித் தவிக்குமென் வேதனையும் கலையதோ!
சீலமிகு சங்கரியே!
கருணை மிகு கடைக்கண்ணால்
என்னாளும் காத்திடுவாய், தாயே பராசக்தி!
-தெய்வத்தை நாடி
வானத்திலே மிதந்து
வண்ண ஒளி தன்னை
வாரி வழங்கும் தட்டு
பூமியென்னும் கோளருகே
சுழன்று வரும் தட்டு
சூரியனின் ஒளி பெற்றே
நமக்குதவும் தட்டு
நல்ல நல்ல தட்டு அது
வண்ண நிலா தட்டு.
-பாப்பா பாட்டோ!
விரிந்த மலர் பன்னிரண்டு
தேவீ! பரசக்தி! மீனாட்சி! உமையவளே!
குவளைக் கண் திறந்தென்னைப் பார்த்திட்டால்
கவலையெல்லாம் தீர்ந்து நான் களித்திருக்க மாட்டேனோ!
கருணை மிகு காமாட்சி உன்
அருள் சுரக்கும் பார்வை பட்டால்
அருவியெனப் பொழியுமென் அழுகையுந்தான் தீராதோ!
கோலமிகு குமரியம்மன், தாயே!
நீ குளிர்கண்ணால் நோக்கியென்னை ஏறெடுத்தால்
ஏங்கித் தவிக்குமென் வேதனையும் கலையதோ!
சீலமிகு சங்கரியே!
கருணை மிகு கடைக்கண்ணால்
என்னாளும் காத்திடுவாய், தாயே பராசக்தி!
-தெய்வத்தை நாடி
Saturday, 19 March 2011
ஒன்பதாம் மடல்
எத்தனையோ பாட்டெழுதி இத்தனை நாள் போக்கிவிட்டேன்.
இன்னுமென்ன வேண்டுகின்றாய்?
கொடும் பார்வை தனை வீசி
அனலாகக் கக்குகின்றாய்.
ஆயினும் நான் அரவணைத்து
அடிதாங்கி நிற்கின்றேன்.
கோபத்தை நீ தணித்துக்
குளிர் புனலாக வாராயோ?
-அம்பா நீ இரங்காயெனில்
வார்ப்பு பத்து
கூட்டினுள் நத்தை போல் கிடந்த என்னை நீயே
காட்டினுள் சிங்கமென்று ஏற்றி வைத்தாய்.
இது என்ன விந்தை என்று வியந்து நின்றேன்.
நீயோ மமதையாய் சிரித்து நிற்கின்றாய்
நத்தை கூடும் உனக்குப் பெரிதென்று -குறுகிய
வட்டத்தில் என்னை விலங்கிட்டு விட்டாய்
நாளை எந்த உருவில் வார்ப்பாய் என்று
நானும் எண்ணிச் சிரிக்கின்றேன்!
உருவாக்குதல் கடினமென்ற உண்மையறிந்து
நாளும் வாளாவிருக்கின்றேன்.
-ஒருவரை ஒருவர் உருவாக்குதல் உலகினில் உண்டன்றோ!!
இன்னுமென்ன வேண்டுகின்றாய்?
கொடும் பார்வை தனை வீசி
அனலாகக் கக்குகின்றாய்.
ஆயினும் நான் அரவணைத்து
அடிதாங்கி நிற்கின்றேன்.
கோபத்தை நீ தணித்துக்
குளிர் புனலாக வாராயோ?
-அம்பா நீ இரங்காயெனில்
வார்ப்பு பத்து
கூட்டினுள் நத்தை போல் கிடந்த என்னை நீயே
காட்டினுள் சிங்கமென்று ஏற்றி வைத்தாய்.
இது என்ன விந்தை என்று வியந்து நின்றேன்.
நீயோ மமதையாய் சிரித்து நிற்கின்றாய்
நத்தை கூடும் உனக்குப் பெரிதென்று -குறுகிய
வட்டத்தில் என்னை விலங்கிட்டு விட்டாய்
நாளை எந்த உருவில் வார்ப்பாய் என்று
நானும் எண்ணிச் சிரிக்கின்றேன்!
உருவாக்குதல் கடினமென்ற உண்மையறிந்து
நாளும் வாளாவிருக்கின்றேன்.
-ஒருவரை ஒருவர் உருவாக்குதல் உலகினில் உண்டன்றோ!!
Friday, 18 March 2011
Grandchildren, Aren’t they adorable!
Today is cleaning day in my house! Every Tuesday.
From very early on this morning my 21 month old grandson started to amaze me. Recently, he started picking up every word we say. I was in the kitchen, when he came to me and asked me something from the kitchen table. He said,”pathi, tshyu”. I picked him up and started handing over things from the bench top one by one, because I didn’t understand what he was trying to say. He didn’t get what he was looking for. Immediately he realised that he should change his approach, so pointed at something. There lay the tissue box. He wanted a tissue. He got a tissue and a kiss on the cheek.
Later I was busy doing something when my daughter asked me to listen to him. He had surprised her with something he said. He immediately came to me and said “koyin” while holding a 20 cent coin in his hand. What a show off! Another kiss from both of us!
Then he became his naughty self again.
I was mopping the ground floor after having finished mopping the basement level. Both my daughter and I just looked away from him for a minute.
He thought “This is my chance. I’m going to walk backwards with a toy in my hand”.
Next minute he had walked into the bucket of water. The bucket toppled, spilling all the water and he fell down on the bucket and started crying. It was chaotic! I had to mop the whole floor again. Took him to the shower and changed all his clothes. The crying didn’t stop for a long time! He was wondering why mummy was shouting at him! This would have been better with a video clip attached .
One minute they amuse, the very next minute they exasperate!! That’s Children for you!
இது என்ன கொடுமை!!
சமீபத்தில் என்னுடைய பெண் "வாட்டர்" என்கிற திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நானும் கடைசி சில காட்சிகளைப் பார்த்தேன். அதிலிருந்தே கதையின் கருத்தை ஊகிக்க முடிந்த்து.
இந்து சமவெளி நாகரிகத்தை உலகிற்குக் கொடுத்த் இந்தியா, வேதங்களுக்குப் பிறப்பிடமான இந்தியா, அர்த்தநாரீஸ்வரரை , ஆணும், பெண்ணும் சேர்ந்த உருவினை தெய்வமாக வழிபடும் இந்தியா, மனிதனையும், மிருகத்தையும் ஒருங்கிணைத்து பிள்ளையாராகவும், அனுமானாகவும் வழிபட்டு நாகரீகத்தில் மேம்பட்டிருக்கும் இந்தியா,
சமஸ்க்ருத பஷையிலிருக்கும் ஓராயிரம் விஷயங்களைப் படித்து அதனையொட்டி தங்கள் ஆராய்ச்சிகளை மேம்படுத்த வெளிநாட்டினரை அனுமதித்த இந்தியா, இப்படி ஒரு கேவலமாக விதவைகளை நடத்தி வரலாற்றில் ஒரு இருட்டடிப்பான இடத்தைப் பிடித்தது எப்படி?
ஏழு வயதுப் பெண் ஒரு விதவையா? கல்யாணம் செய்து கொள்வதன் தாத்பரியம் என்ன? தாம்பத்யம் மூலம் உலகத்தில்
உயிரினத்தைத் தழைக்கச் செய்வது. ஏழு வயதில் அதை அவள் அனுபவிக்காத போது, விதவை என்று அவளைக் கொடுமைப் படுத்தும் உரிமையை ஆண்கள் எங்ஙனம் எடுத்துக் கொண்டனர்?அந்தக் கலியாணத்திற்கு ஏது மதிப்பு?
உச்சக்கட்டக் கொடுமை என்ன என்றால் இம்மாதிரியான சம்பவங்கள் இன்றும் நடப்பது அதனை நடக்க விடுவது!!
இந்து சமவெளி நாகரிகத்தை உலகிற்குக் கொடுத்த் இந்தியா, வேதங்களுக்குப் பிறப்பிடமான இந்தியா, அர்த்தநாரீஸ்வரரை , ஆணும், பெண்ணும் சேர்ந்த உருவினை தெய்வமாக வழிபடும் இந்தியா, மனிதனையும், மிருகத்தையும் ஒருங்கிணைத்து பிள்ளையாராகவும், அனுமானாகவும் வழிபட்டு நாகரீகத்தில் மேம்பட்டிருக்கும் இந்தியா,
சமஸ்க்ருத பஷையிலிருக்கும் ஓராயிரம் விஷயங்களைப் படித்து அதனையொட்டி தங்கள் ஆராய்ச்சிகளை மேம்படுத்த வெளிநாட்டினரை அனுமதித்த இந்தியா, இப்படி ஒரு கேவலமாக விதவைகளை நடத்தி வரலாற்றில் ஒரு இருட்டடிப்பான இடத்தைப் பிடித்தது எப்படி?
ஏழு வயதுப் பெண் ஒரு விதவையா? கல்யாணம் செய்து கொள்வதன் தாத்பரியம் என்ன? தாம்பத்யம் மூலம் உலகத்தில்
உயிரினத்தைத் தழைக்கச் செய்வது. ஏழு வயதில் அதை அவள் அனுபவிக்காத போது, விதவை என்று அவளைக் கொடுமைப் படுத்தும் உரிமையை ஆண்கள் எங்ஙனம் எடுத்துக் கொண்டனர்?அந்தக் கலியாணத்திற்கு ஏது மதிப்பு?
உச்சக்கட்டக் கொடுமை என்ன என்றால் இம்மாதிரியான சம்பவங்கள் இன்றும் நடப்பது அதனை நடக்க விடுவது!!
காலையில் ஒரு காட்சி.
மிக இனிய காலை நேரம். அடுப்பிற்குப் பக்கத்தில் பெரிய ஜன்னல். அதன் வழியே வரும் பொன்னான காலை இளங்கதிர்கள். காதில் இன்னிசையாகக் கேட்கும் பறவைகளின் கரையல். ஃபில்டரில் போட்ட காஃபியின் மணம்.இதையெல்லாம் அனுபவித்துக் கொண்டிருந்த நான் கற்பனை உலகிற்குத் தாவினேன். 'அவன் அருகே வந்துமெல்ல அணைத்தபடி மௌனமாக என்னைப் போல் ரசித்தவண்ணம் இருந்தான்.
இதை அப்படியே கவிதையாக எழுதினால் என்ன? என்று அவன் கேட்க, உடனே இருவரும் கவிதை எழுதத் துவங்கினோம்.
"காலை ஒளிக் கதிர்தான் பாய்ந்த்தென்னே
---------------------------------------------" '
"விசாலி ஏ விசாலி உன்னைத்தானே, கூப்பிடறது காதுல விழலையா? ஏன் மரம் மாதிரி நிக்கற" என்ற கணவரின் குரல் காதின் உள்ளே கடூரமாக ஒலிக்க கற்பனை கலைந்த நான் வாழ்க்கை வேறு, கற்பனை உலகம் வேறு என்று நினைத்துப் பெருமூச்சு விட்டவாறு 'என்ன?' என்று கேட்டேன். வாழ்க்கை சில சமயங்களில் இப்படித்தான் ஓடுகிறது.
இதை அப்படியே கவிதையாக எழுதினால் என்ன? என்று அவன் கேட்க, உடனே இருவரும் கவிதை எழுதத் துவங்கினோம்.
"காலை ஒளிக் கதிர்தான் பாய்ந்த்தென்னே
---------------------------------------------" '
"விசாலி ஏ விசாலி உன்னைத்தானே, கூப்பிடறது காதுல விழலையா? ஏன் மரம் மாதிரி நிக்கற" என்ற கணவரின் குரல் காதின் உள்ளே கடூரமாக ஒலிக்க கற்பனை கலைந்த நான் வாழ்க்கை வேறு, கற்பனை உலகம் வேறு என்று நினைத்துப் பெருமூச்சு விட்டவாறு 'என்ன?' என்று கேட்டேன். வாழ்க்கை சில சமயங்களில் இப்படித்தான் ஓடுகிறது.
Subscribe to:
Posts (Atom)