கருவினில் வளர்கையில்
நான் கண்டேன் பல தொல்லை,
பிறந்தபின் நீ
தந்தாய் சிரிப்பெனும் ஓர் முல்லை;
பல மாதம் கழிந்தபின்
நீ நகர்ந்தாய் வட்டமிட,
பார்த்து நான்
களித்தேன் அது நெஞ்சைத் தொட்டுவிட;
அடுத்து நின்றாய்
நடந்தாய் ஓடினாய்,
நானும் ஆடினேன்
உன்னுடன் ஓடினேன்;
நாட்கள் நகர பிதற்றினாய்ப்
பேச்சென்று,
வியப்பினால் விக்கித்தேன்
இதையும் மெச்சவோவென்று;
இருபினும் இருக்கிறது
நாள் முழுதும் உன் வேலை,
ஆயினும் இழுக்கிறது
குறும்பெனும் உன் லீலை;
நீயும் வளர்ந்தாய்
எண்ணிலா சிறப்புடன்,
நானும் நினைத்தேன்
சற்றே மயக்கமுடன்;
நானென்று காண்பேன்
நீ வளர்ந்த படிகளை,
இன்னொன்று ஈன்றால்
தந்திடுமோ செல்ல அடிகளை;
நினைவு கூர்ந்தேன்
நான் கண்ட பல தொல்லை,
இல்லை வென்றிடுமோ
சிரிப்பெனும் முல்லை!
உலகில் மக்கட்
தொகை பெருக இதுதானோ காரணம்?
No comments:
Post a Comment